திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், “ ஒரு குடும்பம் ஒரு இலட்சம்” சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்.

 மதிப்பிற்கும், அன்பிற்குமுரிய திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின், “ ஒரு குடும்பம் ஒரு இலட்சம்” சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற முயற்சியாளர்களின் விபரங்களாவன..

1) க. சிவானந்தன் மூங்கிலாறு ( விழிப்புலன் அற்றவர், இவரிற்கு விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்புக்காக வழங்கப்பட்டது)
2) ச. நிருபா காங்கேசன்துறை (முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர், பெண்தலைமைத்துவ குடும்பம், கோழிக்கூடு அமைப்பதற்கும், ஆடு வளர்ப்பிற்குமாக வழங்கப்பட்டது)
3) ந. பத்மலீலா புதுக்குடியிருப்பு( பெண்தலைமைத்துவகுடும்பம், தையல் உபகரணங்கள், துணிகள் கொள்வனவிற்காக வழங்கப்பட்டது.
4)கு. ரசிகலா உடையார்கட்டு ( பெண்தலைமைத்துவகுடும்பம், தையலை விருத்தி செய்வதற்கு தேவையானவற்றை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டது.)
5) சிவசாந்தினி உழவனூர் ( பெண்தலைமைத்துவகுடும்பம் , இவரது வேண்டுகோளுக்கு இணங்க தையல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்டது
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின்மூலம் நிதிகிடைக்கப்பெற்றவர்களை மேற்பார்வை செய்து, நெறிப்படுத்திய எமது நிறுவனத்தின் நிர்வாகப்பிரிவைச்சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி சத்தியாவிற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் , ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றவேண்டுமென, மக்கள் நலன் கருதி எமக்கு நிதிப்பங்களிப்பு செய்துவரும் திரு. சி. பிறேம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை நிறுவனத்தின் சார்பிலும், பயன்பெற்ற முயற்சியாளர்கள் சார்பிலும் தெரிவித்துக்கொள்கின்றோம்.







Powered by Blogger.